கோவை, நவம்பர் 17: கோவையில் திடீரென மூடுபனி ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் பருவமழை சற்றே ஓய்ந்துள்ளது. பொதுவாக டிசம்பர்- ஜனவரி மாதங்களில் பனி மூட்டம் மற்றும் குளிர் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது கோவையில் நவம்பர் மாதத்திலேயே பனி உருவாகியுள்ளது.
இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் அனேக இடங்களில் பனி மூட்டம் ஏற்பட்டது.

பல்வேறு பகுதிகளை முழுவதுமாக பனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதியடைந்தனர்.
மேலும், பகலிலேயே விளக்குகளை ஒளிரவிட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டது.