நவம்பர் 16
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், முன்னணி வீரர்களின் விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. காலை முதலே அவ்வப்போது மழை பெய்ததால், மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இதனால், முதல் நாள் ஆட்டம் 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமி, உமேஷ், புவனேஷ்வர் என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜா இடம் பிடித்தனர்.
தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் தவான் களமிறங்கினர். போட்டித் தொடங்கியது முதலே இந்திய அணி வீரர்களுக்கு லக்மல் கடும் சவாலாக விளங்கினார். இவர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் டக்-அவுட்டானார். தவானை 8 ரன்னிலும், கேப்டன் கோலியை ரன் எதுவும் எடுக்கவிடாமல் லக்மல் அவுட்டாக்கினார்.
இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னரே முடிவுக்கு வந்தது. புஜாரா (8), ரகானே (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், முன்னணி வீரர்களின் விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. காலை முதலே அவ்வப்போது மழை பெய்ததால், மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இதனால், முதல் நாள் ஆட்டம் 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமி, உமேஷ், புவனேஷ்வர் என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜா இடம் பிடித்தனர்.
தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் தவான் களமிறங்கினர். போட்டித் தொடங்கியது முதலே இந்திய அணி வீரர்களுக்கு லக்மல் கடும் சவாலாக விளங்கினார். இவர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் டக்-அவுட்டானார். தவானை 8 ரன்னிலும், கேப்டன் கோலியை ரன் எதுவும் எடுக்கவிடாமல் லக்மல் அவுட்டாக்கினார்.
இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னரே முடிவுக்கு வந்தது. புஜாரா (8), ரகானே (0) அவுட்டாகாமல் இருந்தனர்.