ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கோவை, நவம்பர் 16: ராஜ்பவனில் அதிகாரிகளை அழைத்துப் பேசியிருக்கலாம் என்றும், அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அவர் கூறியதாவது:-

தமிழக ஆளுநர் ராஜ்பவனில் எந்த அதிகாரியையும் அழைத்து பேசலாம். முதலமைச்சர், தலைமை செயலாளரை அழைத்து பேசலாம். ஆனால் அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆளுநர் ஆய்வு நடத்துவது ஜனநாயக மரபல்ல. தற்போதையமுதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் அடிமைகளாக இருக்கின்றனர்.

முன்னாள் ஆளுநர் வித்யாசாகரிடம் அதிமுகவை சேர்ந்த 18 எம்.எல்.ஏ க்கள் கொடுத்த கடிதத்தின் மீது தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கையாளாலாகாத பினாமி அரசாக தமிழக அரசு இருக்கிறது. பிரதமர் மோடியின் அடிமைகளாக முதலமைச்சர், அமைச்சர்கள் இருக்கின்றனர்.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு போதுமானதல்ல. கிரைண்டர் உற்பத்திக்கான வரியினை மேலும் குறைக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதா வழிப்படி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு, அவர் மூடிய டாஸ்மாக் கடைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் திறந்து கொண்டு இருக்கின்றனர். நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வரட்டும், அதன் பின்னர் அவர் குறித்து பேசலாம்.

ஆறுகளில் மணல் எடுக்க தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். சசிகலாவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது மட்டும் போதாது. சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் தரகர்களாக இருந்து பணம் வசூல் செய்து கொடுத்த ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் உண்மை நிலை தெரியும். என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...