கோவை, நவம்பர் 16: ராஜ்பவனில் அதிகாரிகளை அழைத்துப் பேசியிருக்கலாம் என்றும், அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அவர் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் ராஜ்பவனில் எந்த அதிகாரியையும் அழைத்து பேசலாம். முதலமைச்சர், தலைமை செயலாளரை அழைத்து பேசலாம். ஆனால் அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆளுநர் ஆய்வு நடத்துவது ஜனநாயக மரபல்ல. தற்போதையமுதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் அடிமைகளாக இருக்கின்றனர்.
முன்னாள் ஆளுநர் வித்யாசாகரிடம் அதிமுகவை சேர்ந்த 18 எம்.எல்.ஏ க்கள் கொடுத்த கடிதத்தின் மீது தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கையாளாலாகாத பினாமி அரசாக தமிழக அரசு இருக்கிறது. பிரதமர் மோடியின் அடிமைகளாக முதலமைச்சர், அமைச்சர்கள் இருக்கின்றனர்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு போதுமானதல்ல. கிரைண்டர் உற்பத்திக்கான வரியினை மேலும் குறைக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதா வழிப்படி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு, அவர் மூடிய டாஸ்மாக் கடைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் திறந்து கொண்டு இருக்கின்றனர். நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வரட்டும், அதன் பின்னர் அவர் குறித்து பேசலாம்.
ஆறுகளில் மணல் எடுக்க தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். சசிகலாவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது மட்டும் போதாது. சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் தரகர்களாக இருந்து பணம் வசூல் செய்து கொடுத்த ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் உண்மை நிலை தெரியும். என்றார்.
ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அவர் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் ராஜ்பவனில் எந்த அதிகாரியையும் அழைத்து பேசலாம். முதலமைச்சர், தலைமை செயலாளரை அழைத்து பேசலாம். ஆனால் அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆளுநர் ஆய்வு நடத்துவது ஜனநாயக மரபல்ல. தற்போதையமுதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் அடிமைகளாக இருக்கின்றனர்.
முன்னாள் ஆளுநர் வித்யாசாகரிடம் அதிமுகவை சேர்ந்த 18 எம்.எல்.ஏ க்கள் கொடுத்த கடிதத்தின் மீது தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கையாளாலாகாத பினாமி அரசாக தமிழக அரசு இருக்கிறது. பிரதமர் மோடியின் அடிமைகளாக முதலமைச்சர், அமைச்சர்கள் இருக்கின்றனர்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு போதுமானதல்ல. கிரைண்டர் உற்பத்திக்கான வரியினை மேலும் குறைக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதா வழிப்படி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு, அவர் மூடிய டாஸ்மாக் கடைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் திறந்து கொண்டு இருக்கின்றனர். நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வரட்டும், அதன் பின்னர் அவர் குறித்து பேசலாம்.
ஆறுகளில் மணல் எடுக்க தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். சசிகலாவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது மட்டும் போதாது. சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் தரகர்களாக இருந்து பணம் வசூல் செய்து கொடுத்த ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் உண்மை நிலை தெரியும். என்றார்.