அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் - திண்டுக்கல் சீனிவாசன்

கோவை, நவம்பர் 16: அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆளுநர் ஆய்வு குறித்து உள்ளாட்சிதுறை அமைச்சரின் கருத்தே தனது கருத்து. தூய்மை இந்தியா திட்டத்தில் ஆளுநர் நல்ல பணிகளையே செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தால் ஏற்று கொண்டிருக்க வேண்டும். 

அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன். அமைச்சர் இல்லாமல், அரசு அதிகாரிகளை வைத்து மட்டும் கூட்டம் நடத்தியதால் மாநில உரிமை பறிபோகாது. மத்திய அரசு திட்டத்தின் செயல்பாட்டையே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் வேறு மாநில ஆளுநராக இருந்த இடங்களில் இது போன்ற ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்றார்.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அதிமுக கட்சி அழிந்துவிடும் என்றும், ஊழல் ஆட்சி எனக் கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதிமுக கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இது மக்களுக்கான ஊழலற்ற ஆட்சி. எதிர்வினை ஆற்றும் அளவிற்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கட்சிகளை பற்றி சந்தர்பம் வரும்போது விமர்சனம் செய்வோம். இவ்வாறு கூறினார். 

கோவை ஆணைகட்டியில் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை அனைத்து நடவடிக்கைகளும எடுத்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்திருப்பது இயற்கையானது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...