கோவையில் கியாஸ் கசிவால் தீவிபத்து : வீட்டு உபயோகப்பொருட்கள் முற்றிலுமாக கருகின

கோவை, நவம்பர் 13 

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 6 வீடுகள் உள்ளன. 5 குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். 

இந்த வீடுகளுள் ஒன்றில் வசிப்பவர் சுகுணா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று வழக்கம் போல் வீட்டு சமையல் வேலைகளை முடித்துவிட்டு சுகுணாவும் அவரது கணவரும் பணிக்கு புறப்பட்டனர்.  குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். 

மதியம் 1 மணியளவில் வீட்டில் இருந்து கரும்புகை கசியத்தொடங்கியது.  தொடர்ந்து, வீட்டின் கூரையில் தீப்பிடித்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. 

இது தொடர்பாக, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்  பேரில் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் 5 பேர் கொண்ட தீயணைப்பு படைக்குழுவினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 



சுமார் இருபது நிமிட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, மெத்தை மற்றும் சமையல் பாத்திரங்கள் முற்றிலுமாக எரிந்தன. 

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அருகே தனியாருக்குச்சொந்தமான மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. 

தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிற்கப்பட்டது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...