கோவை, நவம்பர். 13: தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை மாநகர எல்லைக்குள் அனுமதிப்பதில்லை என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவையில் நடபெறும் விபத்துக்களில் 90 சதவிகித உயிரிழப்புகள்தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தான் ஏற்படுகிறது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் 111 பேர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளால் 71 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாநகரின் எல்லைப்பகுதிகளில் சரவணம்பட்டி, சின்னியம்பாளையம், திருச்சி சாலை காமாட்சிபுரம், ஈச்சனாரி, பேரூர், சுகுணாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதிக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இருந்தால் வாகனத் தணிக்கையின் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அதோடு, சோதனைச்சாவடிகளின் அருகேயே தலைக்கவசம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு அவர்கள் அதை வாங்கி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல், சீட் பெல்ட் அணியாமல் மாநகர் பகுதிகளில் இருந்து புற நகர் பகுதிகளுக்கு செல்லும் கார் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனத் தணிக்கை தொடந்து நடைபெறும். மக்களின் நலன் காக்கவே காவல்துறையினர் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவையில் நடபெறும் விபத்துக்களில் 90 சதவிகித உயிரிழப்புகள்தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தான் ஏற்படுகிறது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் 111 பேர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளால் 71 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாநகரின் எல்லைப்பகுதிகளில் சரவணம்பட்டி, சின்னியம்பாளையம், திருச்சி சாலை காமாட்சிபுரம், ஈச்சனாரி, பேரூர், சுகுணாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதிக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இருந்தால் வாகனத் தணிக்கையின் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அதோடு, சோதனைச்சாவடிகளின் அருகேயே தலைக்கவசம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு அவர்கள் அதை வாங்கி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல், சீட் பெல்ட் அணியாமல் மாநகர் பகுதிகளில் இருந்து புற நகர் பகுதிகளுக்கு செல்லும் கார் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனத் தணிக்கை தொடந்து நடைபெறும். மக்களின் நலன் காக்கவே காவல்துறையினர் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.