தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை மாநகர் பகுதிக்குள் அனுமதிப்பதில்லை - காவல்துறை துணை ஆணையர்

கோவை, நவம்பர். 13: தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை மாநகர எல்லைக்குள் அனுமதிப்பதில்லை என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவையில் நடபெறும் விபத்துக்களில் 90 சதவிகித உயிரிழப்புகள்தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தான் ஏற்படுகிறது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் 111 பேர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளால் 71 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். 

கோவை மாநகரின் எல்லைப்பகுதிகளில் சரவணம்பட்டி, சின்னியம்பாளையம், திருச்சி சாலை காமாட்சிபுரம், ஈச்சனாரி, பேரூர், சுகுணாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதிக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இருந்தால் வாகனத் தணிக்கையின் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 

அதோடு, சோதனைச்சாவடிகளின் அருகேயே தலைக்கவசம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு அவர்கள் அதை வாங்கி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். 

அதேபோல், சீட் பெல்ட் அணியாமல் மாநகர் பகுதிகளில் இருந்து புற நகர் பகுதிகளுக்கு செல்லும் கார் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த வாகனத் தணிக்கை தொடந்து நடைபெறும். மக்களின் நலன் காக்கவே காவல்துறையினர் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...