ஆலந்துறை அருகே பெண் யானை மர்ம சாவு - தொடரும் யானைகளின் உயிரிழப்பால் வனஆர்வலர்கள் அதிருப்தி

கோவை, நவம்பர் 9: கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் பெண் யானை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், மதுக்கரை வன சரகத்திற்குட்பட்ட  கரடிமடை எல்லையின் மேற்கு பிரிவில் உள்ள வனப்பகுதியில் யானை உயிரிழந்து கிடப்பதாக  வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இறந்த யானையை ஆய்வு செய்தனர். பின்னர், யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பிரேத பரிசோதனைக்கு பிறகே யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...