கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் 5 பேர் மனு

கோவை, நவம்பர் 7: கந்துவட்டிக் கொடுமையில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு கோவை மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.



சவுரிபாளையம் பகுதியில் சுப்ரமணி என்பவர் கந்துவட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம், குருராசன், மணிகண்டன், விஜயேந்திர பூபதி, கார்த்திகேயன், ரெஜிஸ் சாந்தகுமார் ஆகிய ஐந்து பேரும் தொழில் தொடங்கக் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். இதில், குருராசன் என்பவர் ரூ.1.80 லட்சம் வாங்கியதாகவும், இதுவரை ரூ.7.89 லட்சம் வட்டி மட்டுமே கட்டிவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல, வாங்கிய தொகையை விட 3 மடங்கு தொகையை மற்ற அனைவரும் கட்டி விட்ட பிறகும், இன்னும் பணம் வேண்டும் என சுப்ரமணி தங்களை மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட 5 பேரும் இன்று (நவம்.,7) கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். 

தொழில் துவங்க ரூ.7 லட்சம் பணம் வாங்கி தற்போது வரை 10 மடங்கு அதிகமாக பணம் கட்டியும், மேலும், ரூ.20 லட்சம் செலுத்துமாறு சுப்ரமணி வீட்டிற்கு வந்து மிரட்டுவதாக மணிகண்டன் புகார் தெரிவித்தார். மேலும், வட்டிக்கு பணம் வாங்கும் போது உறுதிமொழி பத்திரம், நிரப்பப்படாத மூன்று காசோலைகள் என பல்வேறு உறுதி தாள்களை வாங்கி வைத்துக்கொண்டு தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...