வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இறந்தவரின் விவரங்களை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது,


கோவை:

நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் வடகோவை ரயில் நிலையம் அருகே அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், தண்டவாளத்தில் கடுமையாக காயமடைந்து கிடந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், உயிரிழந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர், முழு முகவரி மற்றும் குடும்ப விவரங்கள் ஆகியவை இதுவரை தெரியவில்லை. அவர் கையில் பச்சைக் குத்து இருந்ததுடன், உடலில் ஊதா நிற டவுசர் மட்டும் அணிந்திருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் எந்தவித அடையாள ஆவணங்களும் இல்லை என்பதால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர் எவ்வாறு ரயிலில் இருந்து தவறி விழுந்தார், தற்செயல் விபத்தா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளிடமும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...