"கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்"


கோவை, நவம்பர் 7: கோவை, ஒண்டிப்புதூர் அருகே இருகூர் இரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், மேம்பாலத்தின் மீது அதிகளவிலான விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த மேம்பாலத்தை திமுக மாநகர தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டதுடன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து, அவர் கூறியதாவது:- "இருகூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் தற்போது வரை இங்கு விபத்து ஏற்பட்டு 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் கூட அமைக்கப்படாத அவலநிலை நீடிக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறை இந்த மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திமுக ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாட்டின்போது, அடிக்கல் நடப்பட்ட காந்திபுரம் மேம்பாலம் மக்கள் பயன்படும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் திமுக ஆட்சியில் போடப்பட்ட வரைபடத்தை மாற்றி தனியார் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மாவட்டம் முழுக்க ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

கோவையில் தற்போது நடைபெற்று வரும் 7 மேம்பாலப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...