நீலகிரி, நவம்பர் 7: நீலகிரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் டிசம்பர் 7ம் தேதியன்று பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளின் விவரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் திரு.முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தெ.பாஸ்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் டிசம்பர் 7ம் தேதியன்று பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளின் விவரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் திரு.முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தெ.பாஸ்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.