நீலகிரியில் அரிய வகை புள்ளி ஆந்தை மீட்பு


நீலகிரி, நவம்பர் 7: நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தினுள் நுழைந்த புள்ளி ஆந்தை பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக கேன்டீனில் ஆந்தை ஒன்று பிடிபட்டது. ஆந்தையை அங்கு பணிபுரிபவரும், வன ஆர்வலருமான ரமேஷ் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.



பாம்புகளை பிடிப்பதில் திறமை வாய்ந்த ரமேஷ் இந்த ஆந்தை குறித்து கூறுகையில், இது அரிய வகை புள்ளி ஆந்தை. மலை பிரதேசங்களை விட சமவெளி பகுதிகளிலேயே அதிகளவில் இருக்கும். எலிகளை விரும்பி உண்ணும் இந்த ஆந்தை முதல் நாள் பிடித்து சாப்பிட்ட உணவை மறுநாள் வாய்வழியாகவே வெளியேற்றி விட்டு புதிய உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டவை என்றார்.

இதுபோன்ற பறவை, விலங்குகள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துள்ள ரமேஷ், பாம்புகளை பிடிப்பதில் திறமையானவர் என்பதும், பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...