முன்விரோதம் காரணமாக கொலை - இருவருக்கு ஆயுள் தண்டனை

கோவை, நவம்பர் 6: முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் கைதான இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவி இந்த பழக்கத்தை கண்டிக்கவே, மூர்த்தி அந்த பெண்ணுடனான பழக்கத்தை நிறுத்திக்கொண்டுள்ளார். இருப்பினும், அந்த பழக்கம் தொடருவதாக எண்ணிய அந்த பெண்ணின் கணவர் சதிஷ்குமார், தனது நண்பர் ஹரிகிருஷ்ணனுடன் இணைந்து கடந்த ஆண்டு மூர்த்தியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

இதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ்குமார், ஹரிகிருஷ்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திரு.குணசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...