கோவை, நவம்பர் 6: முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் கைதான இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவி இந்த பழக்கத்தை கண்டிக்கவே, மூர்த்தி அந்த பெண்ணுடனான பழக்கத்தை நிறுத்திக்கொண்டுள்ளார். இருப்பினும், அந்த பழக்கம் தொடருவதாக எண்ணிய அந்த பெண்ணின் கணவர் சதிஷ்குமார், தனது நண்பர் ஹரிகிருஷ்ணனுடன் இணைந்து கடந்த ஆண்டு மூர்த்தியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ்குமார், ஹரிகிருஷ்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திரு.குணசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவி இந்த பழக்கத்தை கண்டிக்கவே, மூர்த்தி அந்த பெண்ணுடனான பழக்கத்தை நிறுத்திக்கொண்டுள்ளார். இருப்பினும், அந்த பழக்கம் தொடருவதாக எண்ணிய அந்த பெண்ணின் கணவர் சதிஷ்குமார், தனது நண்பர் ஹரிகிருஷ்ணனுடன் இணைந்து கடந்த ஆண்டு மூர்த்தியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ்குமார், ஹரிகிருஷ்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திரு.குணசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.