கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி

கோவை, நவம்பர் 6: கோவையில் கந்து வட்டி கொடுமையால் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நித்யா (35). இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். 

இந்த சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கி முன் நித்யா வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதற்காக செம்மேடு பகுதியை சேர்ந்த நிஷா என்பவரிடம் ரூ.1.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.

அதே நேரத்தில் நித்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் குறித்த நேரத்தில் கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக நிஷா அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நித்யா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பணி முடிந்து வீடுதிரும்பிய பாலகிருஷ்ணன் நித்யா மயங்கிக் கிடப்பதை பார்த்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...