கோவை, நவம்பர் 6: தீபாவளியை முன்னிட்டு ப்ரோசான் மாலில் நடத்தப்பட்ட ஷாப் அன்ட் வின் அமர்க்களம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
கோவை - சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள ப்ரோசான் மால் அண்மையில் தொடங்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் ரூ.1999-க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு கருத்துப் போட்டி ப்ரோசான் மால் சார்பில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினர்.
இந்த நிலையில், இதில்,சிறந்தக் கருத்துக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகள் ப்ரோசான் மாலில் இன்று (நவம்.,6) வழங்கப்பட்டன . முதலிடத்தைப் பிடித்தவருக்கு, ப்ரோசான் மால் இயக்குநர் பிரவின் மெதில், காரை பரிசாக வழங்கினார். 2 மற்றும் 3-ம் இடங்களைப் படித்தவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசளிக்கப்பட்டன . இதேபோல, மேலும் 27 நபர்களுக்கு டைட்டன் கடிகாரம் மற்றும் பல்வேறு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.
கோவை - சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள ப்ரோசான் மால் அண்மையில் தொடங்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் ரூ.1999-க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு கருத்துப் போட்டி ப்ரோசான் மால் சார்பில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினர்.
இந்த நிலையில், இதில்,சிறந்தக் கருத்துக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகள் ப்ரோசான் மாலில் இன்று (நவம்.,6) வழங்கப்பட்டன . முதலிடத்தைப் பிடித்தவருக்கு, ப்ரோசான் மால் இயக்குநர் பிரவின் மெதில், காரை பரிசாக வழங்கினார். 2 மற்றும் 3-ம் இடங்களைப் படித்தவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசளிக்கப்பட்டன . இதேபோல, மேலும் 27 நபர்களுக்கு டைட்டன் கடிகாரம் மற்றும் பல்வேறு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.