தீபாவளியின் போது நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளிப்பு

கோவை, நவம்பர் 6: தீபாவளியை முன்னிட்டு ப்ரோசான் மாலில் நடத்தப்பட்ட ஷாப் அன்ட் வின் அமர்க்களம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கோவை - சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள ப்ரோசான் மால் அண்மையில் தொடங்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் ரூ.1999-க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு கருத்துப் போட்டி ப்ரோசான் மால் சார்பில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினர்.

இந்த நிலையில், இதில்,சிறந்தக் கருத்துக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகள் ப்ரோசான் மாலில் இன்று (நவம்.,6) வழங்கப்பட்டன . முதலிடத்தைப் பிடித்தவருக்கு, ப்ரோசான் மால் இயக்குநர் பிரவின் மெதில், காரை பரிசாக வழங்கினார். 2 மற்றும் 3-ம் இடங்களைப் படித்தவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசளிக்கப்பட்டன . இதேபோல, மேலும் 27 நபர்களுக்கு டைட்டன் கடிகாரம் மற்றும் பல்வேறு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...