பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை சேகரிப்பு, தண்ணீர் விநியோகம், சாக்கடை தூய்மை, தெருவிளக்கு, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.






துரைசாமி நாயுடு லேஅவுட், பெருமாள் கோயில் முன்பு, பாரதி காலனி பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை சக்திமான் இயந்திரம் மூலம் வெட்டும் பணி நடைபெற்றது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை மேற்கொள்ளுமாறு பணியாளரிடம் அறிவுறுத்தினார். இதில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.








அதைத் தொடர்ந்து, முத்து வீதி, முத்து சந்து பகுதியில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி சரியாக வருகிறதா என்பதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் தினசரி உப்பு தண்ணீர் சரியாக வருகிறதா, நல்ல தண்ணீர் ஆறு நாட்களுக்கு ஒரு முறை சரியாக வருகிறதா, சாக்கடை சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா, தெருவிளக்கு சரியாக எரிகிறதா, கொசு புகை மருந்து வாரத்துக்கு ஒரு முறை அடிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.








மேலும் முக்கூட்டு ராமசாமி வீதி, கச்சம நாயுடு வீதி பகுதியில் தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் தினசரி சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார்.




இந்த ஆய்வு மூலம் வார்டு 27 பகுதியில் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து, பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...