திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் குமார் (23) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.



விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர்கள் அதிகம் தங்கி வசிக்கும் ‘லைன் வீடு’ ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில் சுமார் 60 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தானேஸ்வரன் (27) என்பவரும் குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, மேலும் யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...