பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றம்

கோவை, நவம்பர் 6: கோவை மாவட்டம் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளன. இச்சேவையினை மாவட்ட ஆட்சியர் திரு. த.ந. ஹரிஹரன் தொடங்கிவைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவம்பர் 6) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில் பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பொள்ளாச்சி நகராட்சி பகுதியிலுள்ள நிலங்களுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் மனுக்களை எளிதில் சமர்ப்பிக்கவும் நிலப்பதிவேடுகளின் நகல்களை எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் பதிவிறக்கம் செய்யவும் இயலும்.

இந்த நகல்கள் மின்கையொப்பம் செய்யப்பட்டுள்ளதால் இதனை வங்கி மற்றும் சேவைகளுக்கு சமர்ப்பிக்க யாருடைய ஒப்பமும் பெற வேண்டாம். இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நகர்ப்புற நில ஆவணங்கள் நகல்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இணைய வழி சேவையின் மூலமாக எளிதாகவும் விரைவாகவும் எப்பொழுதும் எங்கிருந்தும் நகர நிலப்பதிவேட்டின் நகல்களை www.tn.gov.in/eservices என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. துரை. ரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் திருமதி. காயத்ரிகிருஷ்ணன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் திரு. கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...