கிராமத்தில் சுற்றித் திரிந்த கழுதைப்புலிக்கு மருத்துவர்கள் சிகிச்சை

ஈரோடு, நவம்பர் 6: பவானிசாகர் வனப்பகுதியில் உடல்நலம் குன்றியநிலையில் சுற்றித்திரிந்த கழுதைப்புலிக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கழுதைப்புலி ஒன்று சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கழுதைப்புலியை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்நிலையில், விரட்டியடிக்கப்பட்ட கழுதைப்புலி மீண்டும் சோர்வுடன் சுற்றித்திரிந்தது. இதனால், பவானிசாகர் வனச்சரகர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த கழுதைப்புலியை பிடித்து கால்நடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு வந்தனர்.



பின்னர், வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன் உடல்நலம் குன்றிய கழுதைப்புலிக்கு சிகிச்சை அளித்தார். இதுகுறித்து அவர். கூறியதாவது : இந்த கழுதைப்புலிக்கு சுமார் 10 வயது இருக்கும். இது ஆண் கழுதைப்புலி. புலியின் பற்கள் சேதமடைந்ததால் நீண்டநாள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும், காதில் புழுக்கள் பிடித்துள்ளதால் சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.



மேலும் அவர் கூறுகையில், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த கழுதைப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கி கண்காணித்து வருகின்றோம். மாமிசம் மற்றும் செர்லாக் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகிறது. 

இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் இதுபோன்ற கழுதைப்புலிகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆப்பிரிக்க கழுதைப் புலிகள் பெரும்பாலும் இங்கு காணப்படுவதில்லை. கழுதைப்புலிக்கு கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும் என்றார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...