'கமலஹாசன் நாட்டுக்குள்ளேயே இருக்க முடியாது' - பாரத்சேனா

கோவை, நவம்பர்.5: இந்துக்களை தீவிரவாதிகள் என்று சொன்னால் கமலஹாசன் நாட்டுக்குள்ளேயே இருக்க முடியாது என்று பாரத்சேனா அமைப்பினர் காட்டமாக அறிவித்தனர். 

நடிகர் கமலஹாசன் சமீபகாலமாக அரசியலில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளார். 

அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழலை தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்த கமலஹாசன் சமீபத்தில்  வாரப்பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். 

அதில், 'இந்து தீவிரவாதம் இல்லை என்று இனி மேல் சொல்ல முடியாது' என்ற வார்த்தையை பயன்படுத்தி கட்டுரையை எழுதியுள்ளார்.  இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இதனிடயே கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு பாரத் சேனா அமைப்பைச் சர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, கமலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். தொடர்ந்து அந்த அமைப்பைச்சேர்ந்த மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நடிகர் கமலஹாசன் இந்து மதத்தை இழிவுபடுத்தியுள்ளார். கேரளாவில் இந்துக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். அங்கு உள்ள சில முக்கிய நபர்களுடன் தொடர்பு வைத்துள்ள கமலஹாசன் இங்கும் இந்துக்களை எதிர்த்து வருகிறார். 

இந்துக்கள் அமைதியாக இருக்கின்றனர். இல்லையென்றால் கமல் இந்த நாட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. இதேபோல், கமல் பேசினால் அவரது திரைப்படங்களை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம்' என்றார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...