அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிக்க ஆதார் எண் கட்டாயம்..? - குடியரசுத் தலைவருக்கு வலியுறுத்தி இணையதள கையெழுத்துப் பிரச்சாரம்

கோவை, நவம்பர் 4: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற சட்டத்தை இயற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் கையெழுத்துப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

திரு.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று கறுப்புப் பணம் ஒழிப்பதாகும். இதன் நடவடிக்கைகளாக, கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்த மத்திய அரசு, வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலமாக, அரசுக்கு தெரியாமல், யாரும் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. 

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அளிக்க ஆதார் எண் கட்டாயப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் எழுந்துள்ளது. கறுப்புப் பண நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசு, ஏன் இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

ஆதார் எண் கட்டாயம் என சட்டம் கொண்டு வந்துவிட்டால், இனிவரும் காலங்களில் ரொக்கமாகப் பணப்பரிமாற்றம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யாரும் கேள்விக் கனைகளை முன்வைக்க முடியாது . அவர்களுக்கான ஒரே பதில், மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியான பா.ஜ.க, மற்றக் கட்சிகளுக்கு முன் உதாரணமாக, நன்கொடைகளை, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் பெற்றால் சிறப்பான ஒன்றாக இருக்கும். 

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற சட்டத்தை இயற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. 

பணமதிப்புழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதி கறுப்புப் பணத் தடுப்பு தினம் அனுசரிக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் திரு.அருண்ஜேட்லி அண்மையில் அறிவித்திருந்தார். அன்றைய தினத்திற்கு முந்தைய தினம் சென்றடையுமாறு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத்கோவிந்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

இந்த இணையதளக் கையெழுத்து பிரச்சாரமானது, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. தற்போது வரை 2,600-க்கும் மேற்பட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இன்னும் 4 நாட்கள் எஞ்சியிருப்பதால், உறுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்பற்கு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதால், குடியரசுத் தலைவர் உறுதியாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...