மேம்பாலப் பணிகளை துரிதமாக முடிக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் - தே.மு.தி.க.

கோவை, நவம்பர் 4: கோவையில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தே.மு.தி.க.வினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தாமதமாவதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கோவை ரயில்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், "எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் மூடப்பட்ட அரசு மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தாமதமாகும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி தமிழக அரசுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்", என்றார்.



இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தே.மு.தி.க.வினரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகக் கோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...