சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்க போராட்டம்

கோவை, நவம்பர் 4: கோவை தடாகம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே உள்ள சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட வீரபாண்டி குட்டை தடுப்பணை அருகே சேறும் சகதியான இடத்தில் ஒற்றை காட்டுயானை நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், வனத்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் குழுவினர் விரைந்து வந்து யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், 15 முதல் 20 வயது மதிக்கத்தக்க யானை தடுப்பணையில் நீர் குடிக்க வந்ததாகவும், அந்த யானையுடன் ஒரு குட்டி யானையும் வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

நீண்ட நேரமாக யானை சகதியில் சிக்கி நின்று கொண்டிருப்பதால், அதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...