கோவையில் 3-வது மிகப்பெரிய ஹோட்டல் ”லெமன் ட்ரீ” திறப்பு

கோவை, நவம்பர் 3 : ஹோட்டல் ”லெமன் ட்ரீ” இன்று இங்கே தனது பணியை  துவங்கியது . ஹோட்டல் ”லெமன் ட்ரீ” 28 நகரங்களில் 44 கிளைகளை கொண்டுள்ளது.

ஐ.டி.துறை நிறுவனங்கள் கால்பதித்து வரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காளப்பட்டியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலானது, போஸ்ச், காக்னிசெட், டெல் மற்றும் ஹெச்.சி.எல் போன்ற ஐடி நிறுவனங்களின் அருகில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் இருந்து பணி அல்லது ஓய்விற்காக வருபவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 



இந்த ஹோட்டலில், 61 அறைகள் உள்ளன. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய காபி ஷாப் மற்றும் சிட்ரஸ் கஃபே மற்றும் பெரிய ஆலோசனை அறை, உடற்பயிற்சி அறை மற்றும் நீச்சல்குளமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து வெறும் 6 கி.மீ தொலைவிலேயே உள்ளது. இதனிடையே சத்தி மற்றும் அவினாசி தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன. 

இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புலிகள் காப்பகம் ஒருசிறந்த இடமாகும். வெறும் 74 கி.மீ. குன்னூரும், 90 கி.மீட்டரில் உதகையும், 124 கி.மீட்டரில் வால்பறையும் தமிழகத்தின் பிரபலமான மலைப்பகுதிகளாகும். 

கடந்த 2014-ம் ஆண்டு கார்நேஷன் ஹோட்டலும், லெமன் ட்ரீ ஹோட்டலின் மேலாண் நிர்வாகமும், இணைந்து லஷ்ஹானா கன்சல்டட்ன்ஸ் மற்றும் ஹோட்டலியர்சிடம் இந்த ஓட்டலைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 



இதனிடேயே, லெமன் ட்ரீ ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் ரத்தன் கேஷ்வானி கூறுகையில், கோவை மாவட்டமானது, தொழில்வளர்ச்சி பெற்று வரும் இடமாகும். அதிகரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை, மக்களை கவரும் வகையிலான சுற்றுலாத் தளங்கள் போன்றவைகளால், தமிழகத்தில் 2-வது வளர்ந்து வரும் மாவட்டமாக கோவை உள்ளது. தொழில் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உடைய கோவையில், தங்களது ஹோட்டலை விரிவாக்கம் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

தற்போது காளப்பட்டியில் திறக்கப்பட்ட கிளையுடன் சேர்த்து லெமன் ட்ரீ ஹோட்டலானது, 28 நகரங்களில் 44 கிளைகளை கொண்டுள்ளது. கேரளா, பெங்களூரூ, சென்னை,  ஐதராபாத் மற்றும் திருச்சி உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் ஏற்கனவே, தங்களது ஹோட்டல்களை நிறுவியுள்ளது. 



கோவையில் மருத்துவமனைகள், கல்விநிறுவனங்களை இயக்கி வரும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறநெறி அறக்கட்டளையின் ஒரு அங்கமாக லஷ்ஹானா கன்சல்டட்ன்ஸ் மற்றும் ஹோட்டலியர்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...