கோவையில் 3-வது மிகப்பெரிய ஹோட்டல் ”லெமன் ட்ரீ” திறப்பு

கோவை, நவம்பர் 3 : ஹோட்டல் ”லெமன் ட்ரீ” இன்று இங்கே தனது பணியை  துவங்கியது . ஹோட்டல் ”லெமன் ட்ரீ” 28 நகரங்களில் 44 கிளைகளை கொண்டுள்ளது.

ஐ.டி.துறை நிறுவனங்கள் கால்பதித்து வரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காளப்பட்டியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலானது, போஸ்ச், காக்னிசெட், டெல் மற்றும் ஹெச்.சி.எல் போன்ற ஐடி நிறுவனங்களின் அருகில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் இருந்து பணி அல்லது ஓய்விற்காக வருபவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 



இந்த ஹோட்டலில், 61 அறைகள் உள்ளன. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய காபி ஷாப் மற்றும் சிட்ரஸ் கஃபே மற்றும் பெரிய ஆலோசனை அறை, உடற்பயிற்சி அறை மற்றும் நீச்சல்குளமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து வெறும் 6 கி.மீ தொலைவிலேயே உள்ளது. இதனிடையே சத்தி மற்றும் அவினாசி தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன. 

இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புலிகள் காப்பகம் ஒருசிறந்த இடமாகும். வெறும் 74 கி.மீ. குன்னூரும், 90 கி.மீட்டரில் உதகையும், 124 கி.மீட்டரில் வால்பறையும் தமிழகத்தின் பிரபலமான மலைப்பகுதிகளாகும். 

கடந்த 2014-ம் ஆண்டு கார்நேஷன் ஹோட்டலும், லெமன் ட்ரீ ஹோட்டலின் மேலாண் நிர்வாகமும், இணைந்து லஷ்ஹானா கன்சல்டட்ன்ஸ் மற்றும் ஹோட்டலியர்சிடம் இந்த ஓட்டலைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 



இதனிடேயே, லெமன் ட்ரீ ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் ரத்தன் கேஷ்வானி கூறுகையில், கோவை மாவட்டமானது, தொழில்வளர்ச்சி பெற்று வரும் இடமாகும். அதிகரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை, மக்களை கவரும் வகையிலான சுற்றுலாத் தளங்கள் போன்றவைகளால், தமிழகத்தில் 2-வது வளர்ந்து வரும் மாவட்டமாக கோவை உள்ளது. தொழில் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உடைய கோவையில், தங்களது ஹோட்டலை விரிவாக்கம் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

தற்போது காளப்பட்டியில் திறக்கப்பட்ட கிளையுடன் சேர்த்து லெமன் ட்ரீ ஹோட்டலானது, 28 நகரங்களில் 44 கிளைகளை கொண்டுள்ளது. கேரளா, பெங்களூரூ, சென்னை,  ஐதராபாத் மற்றும் திருச்சி உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் ஏற்கனவே, தங்களது ஹோட்டல்களை நிறுவியுள்ளது. 



கோவையில் மருத்துவமனைகள், கல்விநிறுவனங்களை இயக்கி வரும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறநெறி அறக்கட்டளையின் ஒரு அங்கமாக லஷ்ஹானா கன்சல்டட்ன்ஸ் மற்றும் ஹோட்டலியர்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...