டெங்கு பாதிப்பு எங்கே அதிகம் ? - அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம்

கோவை, நவம்பர்.3:  தெலுங்குபாளையம், கணபதி மற்றும் சிங்காநல்லூர் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்கள் தான் டெங்கு  காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு அதிக அளவில் அரசு மருத்துவமனைக்கு    சிகிச்சைக்காக வருகின்றனர். 



தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாவோர்  அதிகரித்த வரும் நிலையில் கடந்த நான்கு மாதங்களில் கோவை மாவட்டத்தில் மட்டும் 60-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.  ஏடிஸ் என்ற வகை கொசு இனத்தால் இந்த காய்ச்சல் பரவி வரும் நிலையில் இன்று, கொசு மனித உயிருக்கு எமனாக உருவெடுத்துள்ளது. 

 

சுத்தமான நீரில் உற்பத்தியாகும் இந்த கொசு இனம் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை என்றும், இவ்வகை கொசுக்கள் கடிப்பதாலேயே டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும், கொசு உற்பத்தியாகும் வகையில் வீட்டின் அருகே தண்ணீரை தேங்கவிட்டிருக்கும் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அபராதம் 

கோவைமாநகரை பொறுத்தவரையில் அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இதுவரை ரூ. இரண்டு லட்ச்சத்திற்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளனர். நேற்று கோவை வடக்கு மண்டலத்திலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கொசு உற்பத்தியாகும் வகையிலும் சுற்றுப்புறத்தை வைத்திருந்த வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், மாநகராட்சிக்கு உட்பட்ட வளாகங்கங்களே சுகாதாரமற்ற நிலையில் இருப்பது வேதனைஅளிப்பதாக உள்ளது. 

இந்த நிலையில், கோவை மாநகரில்  குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் இருந்து தான்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் நோயாளிகள் வருவதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.B.அசோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது :-

கோவை அரசு மருத்துவமனைக்கு நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிசை பெற்று செல்கின்றனர். டெங்கு காய்சசல் பாதிப்பு காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் 50 சதவிகிதத்திற்கு மேற்படடவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது டெங்கு காய்ச்சலால் அனுமதியாவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.  

எந்த பகுதி 

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 

இம்மருதத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது வரை சிகிசைக்கு பெற்றவர்களது விவரங்களின் அடிப்படையில் தெலுங்குபாளையம், கணபதி மற்றும் சிங்காநல்லூர் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்கள் தான் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் சிகிச்சைக்காக வருகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் கூறிய விவரங்களின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்  பகுதிகளில் அதிகமாக ஆய்வு நடத்தி சுகாதாரத்தை பேணிக்காத்தால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறிந்திடும். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...