கோவையில் கந்துவட்டி கொடுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - கட்சி சார்பற்ற விவசாயிகள் போலீஸ் கமிஷனர், கலக்டரிடம் மனு

கோவை, நவம்பர் 3: கோவை மாவட்டத்தில் தலைவிரித்து ஆடும் கந்து வட்டி கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் துறை ஆணையரிடம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். 

இது தொடர்பாக சங்கத்தின் மாநில துணை தலைவர் ஏ.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் விவசாயத் தொழிலை நம்பி பல விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளனர். விளைச்சலின் போதும் வியாபரத்தின் போதும் அவர்களை நாடும் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், நயமாக பேசி பணத்தை கொடுக்கின்றனர். 



தொழிலில் நட்டம் ஏற்படும் போது குறிப்பிட்ட நபர்களால் உடனடியாக பணத்தை திரும்பச்செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கந்து வட்டி கும்பல் அடியாட்களை வைத்து மிரட்டுவதோடு தகாதவார்த்தைகளில் பேசுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். 

இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.

மேலும், டாஸ்மாக் கடைகள் தவிர சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்' என்றார். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...