ஆனந்த சங்கம் அமைப்பு சார்பில் யோகா குறித்த புத்தகம் மற்றும் குறுந்தகடு நாளை வெளியீடு

கோவை, நவம்பர் 3 : கோவையில் ஆனந்த சங்கம் அமைப்பு சார்பில் யோகா குறித்த புத்தகம் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆனந்த சங்கம் யோகா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில், சுவாமி பரமஹம்ச யோகானந்தரின் நேரடி சீடர் கிரியானந்தாவின் குறிப்புகள் கொண்ட புத்தக வெளியீடு கோவையில் நாளை நடக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. 

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, ஆனந்த சங்க அமைப்பானது, இந்தியாவில் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தனர் .உலகம் முழுவதும் அரை மில்லியன் சீடர்கள் இவ்வமைப்பில் உள்ளதாகவும், இந்தியாவில் இந்த அமைப்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு, தற்போது 20,000 பேர் உள்ளதாகத் தெரிவித்தனர்.



மேலும், தற்போது கிரியானந்த சீடர்களான நயசாமி ஜோதிஷ் மற்றும் தேவி கிரியை, யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினர். நாளை நடைபெறும் ஆத்மா ஆரோக்கியத்திற்கான உறுதி மொழிகள் என்ற புத்தகம் தமிழிலும், மை ஹார்ட் ரிமம்பர்ஸ் என்ற 2 புத்தகங்கள் நாளை வெளியிடப்படும் என்றனர். மேலும், 26-வது சர்வதேச திரைப்பட விழாவில் 17 விருதுகள் குவித்த “தி ஆன்சர்” யோகா குறித்த திரைப்பட குறுந்தகடு முதன்முறையாகக் கோவை - அவினாசி சாலையில் உள்ள ஜி.டி.அரங்கில் நாளை வெளியிடப்படும். என்றனர்.

இந்த நிகழ்ச்சியில், சி.பி.ஐ.முன்னாள் இயக்குநர் திரு. கார்த்திகேயன் கலந்து கொள்ள உள்ளார். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...