தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கோவை, நவ.3: திருப்பூரிலிருந்து நேற்று இரவு தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த காரும் பழனியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பூரை சேரந்த நிதி நிறுவன ஊழியர் ராமநாதனின் மனைவி சத்யா, மற்றும் அவரது குழந்தைகள் 6 வயது மித்தின், 8 வயது துவாரிகா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேய பலியானார்கள்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த ராமநாதனுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவத்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ராமநாதனின் சகோதரர் கண்ணன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் இடையன்கோட்டையில் இறந்துவிட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் காரில் சென்றபொழுது ஏற்பட்ட விபத்து இது ." 

இசம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூன்றுபேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளன.

இவ்விபத்து குறித்து கொண்டடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...