கோவை, நவம்பர் 3 : கோவை மாவட்டத்தின் 86-வது வார்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.கே.விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலால், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, தெற்கு மண்டலம் 86-வது வார்டுக்குட்பட்ட கரும்புக்கடை, சேரன்நகர் பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, சேமிப்பு குடோன்களில் தண்ணீர் தேங்கியுள்ள பொருட்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதை ஆணையர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு கொசு உற்பத்தி மற்றும் கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வுகளை அவர் ஏற்படுத்தினார். அப்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப. காந்திமதி, நகர்நல அலுவலர் மருத்துவர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு. ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலால், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, தெற்கு மண்டலம் 86-வது வார்டுக்குட்பட்ட கரும்புக்கடை, சேரன்நகர் பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, சேமிப்பு குடோன்களில் தண்ணீர் தேங்கியுள்ள பொருட்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதை ஆணையர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு கொசு உற்பத்தி மற்றும் கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வுகளை அவர் ஏற்படுத்தினார். அப்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப. காந்திமதி, நகர்நல அலுவலர் மருத்துவர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு. ரவி ஆகியோர் உடனிருந்தனர்.