ரேசன் கடை சர்க்கரை விலை உயர்வுக்குக் கண்டனம் - போராட்டம் நடத்திய வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் கைது

கோவை, நவம்பர் 2: ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை உயர்வைக் கண்டித்து ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

தமிழக குடிமை பொருள் அங்காடிகள் வழங்கப்பட்டு வந்த மானிய விலை சர்க்கரை கிலோ ரூ.13.50 இருந்து ரூ. 25 ஆக உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகச் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்தப் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் சரிவர வழங்காததைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, தங்களது ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...