ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஈஎம்ஐ திட்டம் அறிமுகம்

கோவை, நவம்பர் 1: கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான எளிய ஈஎம்ஐ திட்டம் காபிடல் ஃப்லோட் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த அறிமுக நிகழ்ச்சியில் முதன்மை இயக்க அதிகாரி திரு.வி.ராமகிருஷ்ணா பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணம் கடனாக வட்டி இல்லாமல் வழங்கப்படும். இது ஒரு லாப நோக்கமற்று செயல்படுத்தப்பட்டுள்ளது. கடன் பெற விண்ணப்பம் ஆய்வு கட்டணங்களோ வேறு செலவுகளோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்கோ அல்லது கடன்பெறவோ முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றார்.

இதனைத்தொடர்ந்து, காபிடல் ஃப்லோட் கோவை கிளை மேலாளர் திரு. மணிகண்டன் பேசுகையில், முன்பணம் எதுவும் இல்லாமல் வட்டி இன்றி ஆவண கட்டணமின்றி இந்தத் திட்டத்தினை துவங்கியிருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒன்பது மாதங்கள் மற்றும் பன்னிரண்டு மாதங்கள் என்ற எளிதான சுலப தவனை முறையில் இந்தக் கடன் வசதி வழங்கப்படுகிறது.



நோயாளிகளும், ரத்த உறவுகளும் இந்தக் கடனுக்காக அவர்களது ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் 70 சதவிகிதம் நோயாளிகள் தங்கள் மருத்துவ செலவுகளை உடனடியாக பெற முடியும். கோவை மக்களின் நலனுக்காக எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் மற்றொரு சமூக சேவை முயற்சியாக இது கருதப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மருத்துவர் திரு. பி.சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...