கோவையில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு: மர்ம நபர்கள் துணிகரம்

கோவை, அக்டோபர்.31: கோவை மாநகர் பகுதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த தாமஸ் வீதி பகுதியில் ஏராளமான மொத்த கொள்முதல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு, அழகு சாதன பொருட்கள், மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன.



இப்பகுதியில், பேன்சி கடை நடத்தி வருபவர் மங்காரவ் (35). பணி முடிந்து நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இவரது கடை அருகிலேயே புத்தகக் கடை நடத்தி வருபவர் பிரேம் சிங் (37). இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும், அடுத்தடுத்து இருந்த 3-க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். கொள்ளைபோன பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மாநகரின் முக்கியப் பகுதியில் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை போன சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...