கடனை திருப்பி செலுத்தாத நபரை சரமாரியாக தாக்கிய சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர்: நிலத்தை அபகரித்ததாகவும் புகார்

கோவை, அக்டோபர்.31: கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் லியோ (42). பிராய்லர் கோழி உற்பத்தி தொழில் செய்து வருகிறார். தொழில் நிமிர்த்தமாக காங்கேயம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இவரால் வாங்கிய பணத்தை குறித்த நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில் சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன், பாஸ்கர் லியோவை சரமாரியாக தாக்கியதோடு அவரிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்துள்ளது. 

இது குறித்து பாஸ்கர் லியோ கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது :- தொழில் நஷ்டம் காரணமாக பழனிச்சாமியிடம் வாங்கிய கடனை தன்னால் குறித்த நேரத்தில் திரும்பிச் செலுத்த முடியவில்லை. இதற்காக கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் நடு ரோட்டில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கினார். அதோடு, அவருடன் இருந்த போலீசார் என்னை அருகில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு இழுத்துச்சென்றனர். அங்கு நாள் முழுவதும் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தினார். மேலும், தகாத வார்த்தைகளில் திட்டியதோடு துணை ஆணையர் லட்சுமியின் உத்தரவின்பேரில் தான் இப்படி நடந்துகொள்வதாக தெரிவித்தார்.

சிங்காநல்லூர் பகுதியில் எனக்கு இருக்கும் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை பழனிச்சாமி பெயரில் எழுதித் தருமாறு வற்புறுத்தி தன்னை தாக்கியதோடு எனது மனைவி அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாக மிரட்டினார். தொடர்ந்து, அன்று மாலை தன்னை காவல் நிலையத்திற்கு அலைத்துச்சென்று எனக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார்.

தொடர்ந்து, முனீஸ்வரன் தனது அலுவலகத்தை பூட்டி, எனது வாழ்வாதாரத்தை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளார். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறை ஆணையர் தனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...