காற்றில் பறக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை - பேனருக்கு பதிலாக பலூனில் அலப்பறை

கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரம் மேம்பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் படங்களுடன் பிரமாண்ட பலூன் பறக்கவிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காந்திபுரம் பகுதியில் 1,752 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் உருவ படத்துடன் கூடிய பிரம்மாண்ட பலூனை அமைச்சர் வேலுமணி பறக்கவிட்டார். 



உயிருடன் இருப்பவர்கள் புகைப்படங்களை பிளக்ஸ், பேனர் போன்றவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்திரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பலூன் மூலம் இவர்களின் புகைப்படங்கள் போடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதேவேளையில், அண்ணா புகைப்படத்துடனும், இரட்டை இலை சின்னத்துடனும் பாலம் முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...