காந்திபுரம் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக நாளை திறப்பு - முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைக்கிறார்

கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்ட இரண்டடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (நவ., 1) திறந்து வைக்கின்றார். 



கடந்த 2010-ம் ஆண்டு செம்மொழி மாநாடு நடைபெற்ற போது காந்திபுரத்தில் மூன்றடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சி அமைந்ததால், மூன்றடுக்கு மேம்பாலம் என்பதை இரண்டடுக்கு மேம்பாலம் எனத் திட்டம் மாற்றப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்த 2014ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வந்தது. சுமார், ரூ.195 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. 

காந்திபுரம் பார்கேட் பகுதியில் இருந்து லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் வரையிலான பாலக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. 54 தூண்களுடன் 16.6 மீ., அகலத்துடன், நான்கு வழித்தடமாகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து,வர்ணம் பூசப்பட்டுள்ளது. மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு விட்டன. 



இந்த நிலையில், நாளை (நவ., 1) மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். 

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இன்று நடைபெற்று வருகின்றது. பாலம் முழுவதும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...