தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர் பலி

கோவை, அக்டோபர் 31: முத்து பழனியப்பன் (54), தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளின் போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, அவரின் பிறந்தநாளான நேற்று தமிழக அரசு சார்பில் குருபூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதலைமச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு சென்றிருந்தனர். 

கோவை மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படையில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்து பழனியப்பன் என்பவரும் பாதுகாப்புக்கு சென்றிருந்தார். . இந்த நிலையில், நேற்று பாதுகாப்பு பணியை முடித்த அவர் பரமக்குடியை அடுத்த முல்லைப்பள்ளி என்ற இடத்தில் ஓய்வெடுக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் . தற்போது அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்

காவல்துறையில் பணியாற்றும் போதே முத்து பழனியப்பன் பலியானதால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் வேலை கிடைக்கும் என்பதும், அவரது இளைய மகன் அகில் சுஜின் கோவையில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...