கோவையில் அதிகரித்து வரும் ”செல்ஃப் டிரைவிங் கார்” கலாச்சாரம் - வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக புகார்



கோவை, அக்டோபர் 30 : ”செல்ஃப் டிரைவிங் கார்”  முறை அதிகரித்து வருவதால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் கர்நாடக மாநிலத்தின் ”செல்ஃப் டிரைவிங் கார்” பயன்பாடு அதிகரித்துள்ளது . இதனால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நடப்பாண்டில் நாடாளுமன்றம்  மோட்டார் வாகனச் சட்டம் 2017 என்ற சட்டத்தை  அமல்படுத்த உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஏற்படும் விளைவுகள் என்னவென்றால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, வாடகைக்கு வாகனம் ஓட்டும் அலுவலகம், இவை அனைத்தும் ஒரே அலுவலகம் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் தொழில் செய்ய வேண்டும் என்ற முறையில் அந்த சட்டத்தை வடிவமைத்து உள்ளார்கள். இதன்மூலம் மோட்டார் தொழில் பாதிப்பு அடையும் அவலம் உருவாகியுள்ளது. 

அதாவது, எஃப்.சி.(FC) வேலைகள் மற்றும் வாகன வேலைகள் அனைத்தும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், பல வாகனங்களை இயக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாக உள்ளது. 

மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் என்ற முறை பொதுமக்களிடையே இருக்காது. ஒவ்வொரு முறையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் புதிதாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவையை சுற்றுலா வாகனங்களுக்கு பொருத்துவதை நீக்க வேண்டும். 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும் பேட்ச் உரிமம் முறையை ரத்து செய்ய வேண்டும். வாகன காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களை போல அனைத்து வாகனங்களுக்கும் டி-போர்டு அனுமதி கொடுக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு கொடுக்கும் அனைத்து மாநிலங்களுக்கு சென்ற வர உரிமத்தை போல, சுற்றுலா வாகனங்களுக்கும் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...