அக்டோபர் 30: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னையில் மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு அனுப்புமாறு அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் காலை முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில், இலங்கைக்கு அருகே நேற்று நிலை கொண்ட வளிமண்டல சுழற்சி அதே இடத்தில் நிலவுகிறது. இதனால் வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டம் அனைத்து இடங்களிலும் உள் மாவட்டத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ,ராமநாதபுரம், புதுச்சேரி பகுதிகளில் இன்று(அக்.,30) மாலை கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திரு. அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் காலை முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில், இலங்கைக்கு அருகே நேற்று நிலை கொண்ட வளிமண்டல சுழற்சி அதே இடத்தில் நிலவுகிறது. இதனால் வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டம் அனைத்து இடங்களிலும் உள் மாவட்டத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ,ராமநாதபுரம், புதுச்சேரி பகுதிகளில் இன்று(அக்.,30) மாலை கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திரு. அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.