மனித கழிவுகளை ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

மனிதக் கழிவுகளை பம்பு செட் மூலம் ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினை பொதுமக்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றுவதாக மருத்துவர் உறுதியளித்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை நிர்வாகம், செப்டிக் டேங்கில் உள்ள மனித கழிவுகளை பம்பு செட் மூலம் குன்னூர் கிருஷ்ணாபுரம் உமரிகாட்டேஜ் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மார்க்கெட் வழியாக இரவு நேரத்தில் ஓடையில் கலக்கவிடுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் முபாரக், நகரச் செயலாளர் இராமசாமி ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், முறையாக கழிவுகளை லாரிகள் மூலமாக அகற்றுவதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பம்புசெட்டு அகற்றப்பட்டது. பின், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...