மனிதக் கழிவுகளை பம்பு செட் மூலம் ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினை பொதுமக்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றுவதாக மருத்துவர் உறுதியளித்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை நிர்வாகம், செப்டிக் டேங்கில் உள்ள மனித கழிவுகளை பம்பு செட் மூலம் குன்னூர் கிருஷ்ணாபுரம் உமரிகாட்டேஜ் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மார்க்கெட் வழியாக இரவு நேரத்தில் ஓடையில் கலக்கவிடுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் முபாரக், நகரச் செயலாளர் இராமசாமி ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், முறையாக கழிவுகளை லாரிகள் மூலமாக அகற்றுவதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பம்புசெட்டு அகற்றப்பட்டது. பின், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை நிர்வாகம், செப்டிக் டேங்கில் உள்ள மனித கழிவுகளை பம்பு செட் மூலம் குன்னூர் கிருஷ்ணாபுரம் உமரிகாட்டேஜ் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மார்க்கெட் வழியாக இரவு நேரத்தில் ஓடையில் கலக்கவிடுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் முபாரக், நகரச் செயலாளர் இராமசாமி ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், முறையாக கழிவுகளை லாரிகள் மூலமாக அகற்றுவதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பம்புசெட்டு அகற்றப்பட்டது. பின், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.