கோவை, அக்டோபர் 30: கோட்டைமேடு பகுதியில் முறையாக குப்பைகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாநகர வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி, 82-வது வார்டுக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பைகள் சாலையில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்திற்கு பெரும் இடையூரை ஏற்படுத்துகிறது.
மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, பள்ளியின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கேட் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி, 82-வது வார்டுக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பைகள் சாலையில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்திற்கு பெரும் இடையூரை ஏற்படுத்துகிறது.
மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, பள்ளியின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கேட் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.