கோட்டைமேடு பகுதியில் முறையாக குப்பைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை, அக்டோபர் 30: கோட்டைமேடு பகுதியில் முறையாக குப்பைகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாநகர வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி, 82-வது வார்டுக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பைகள் சாலையில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்திற்கு பெரும் இடையூரை ஏற்படுத்துகிறது.

மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, பள்ளியின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கேட் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...