போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க அதிரடி தடை

அக்டோபர் 30: தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கோவை நுகர்வோர் மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதால், அது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அதைவிடுத்து, சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்கிறார்கள். இதனால், பொதுமக்களின் நலன் கருதி, சிக்னல்களில் இனி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வழக்கை இன்று (அக்.,30) விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். மேலும், இதுவரை வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களின் காலம் முடிவடைந்த பிறகு, அதனை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இனிமேல் யாரும் சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது எனத் தெரிவித்தனர். இவ்வழக்கில், முன்னர் வாய்மொழியாக அறிவுறுத்தியிருந்த நீதிமன்றம், தற்போது விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, திருலோச்சண குமாரி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையான சுற்றுப்புறத்தைப் பேணும் விதமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதலைத் தடுக்க வேண்டும். உயிரோடு இருக்கும் நபர்களுக்கு கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், தற்போது போக்குவரத்து சிக்னலிலும் விளம்பர பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...