பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி மனு

கோவை, அக்டோபர் 30: பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும். முதியோர் ஓய்வூதியத் தொகையினை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாநகராட்சி, 37-வது வார்டு காமராஜ் நகர் பகுதியில் அரசுப் பள்ளியின் அருகிலேயே 1769 எண் கொண்ட மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வருவோர் குடித்துவிட்டு சாலையிலேயே அசுத்தம் செய்கின்றனர். இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், ஆதரவற்ற முதியோர்களுக்காக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவி முறையாக பயனாளர்களை சென்றடைவதில்லை. இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...