"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்பு விசாரணை துவங்கப்படும்"


கோவை, அக்டோபர் 30: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்புதான் விசாரணை துவங்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 5-ம் தேதி அவர் காலமானார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து கடந்த செப்டம்பர் 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அவருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைய அலுவலகத்துக்கு கடந்த 27-ம் தேதி வந்த அவர் பணிகளைத் தொடங்கினார்.

இதனிடையே இன்று ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் இருந்து விசாரணை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கோவையில் ஒரு துக்கநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆறுமுகசாமி கோவை வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதாவின் மரணம் குறித்து 15 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் பெறப்பட்ட பின்னரே விசாரணை துவங்கப்படும். இரு நாட்களுக்குப் பிறகு சென்னை சென்ற பின்புதான் இதுகுறித்தான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...