டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து கோவையில் தமிழக அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

கோவை, அக்டோபர் 29: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக வருவாய் துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 29) டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-



தமிழ்நாடு அரசு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக வருவாய்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளரும், 500 வீடுகளுக்கு மருத்துவத்துறையை சார்ந்த அலுவலர்களும் தினந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு குடியிருப்புகளில் உள்ள ஏடிஸ் லார்வாக்களை ஒழித்தும், கொசுப்புழு வளருவதற்கான காரணிகளை அழித்தும் வருகின்றனர்.



மேலும், ஒரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒர் துணை ஆட்சியர் நிலையிலுள்ள அலுவலர்கள் மூலம் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, சுகாதாரத்துறையின் மூலமும், தன்னார்வலர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் தெரிவித்தார்.

முன்னதாக முதன்மை அவர், வடவள்ளி அண்ணா பல்கலைகழகத்தில் புதிய எளிமையான மற்றும் அதிக பயன்தரக்கூடிய முறையில் மரக்கன்று நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பி.என்.புதூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியின் சுகாதாரம் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.



இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...