மாயமான வருமான வரித்துறை அதிகாரியை தேடி கோவா சென்றது தனிப்படை

கோவை, அக்டோபர். 29: கோவையை சேர்ந்தவர் செண்பகராமன். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி. இவரது மகன் சிவக்குமார்(38) கோவை வருமான வரித்துறை, தலைமையிட துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு, ஐ.ஆர்.எஸ். தேர்ச்சி பெற்றவர்.

இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி சிவக்குமார் திடீரென மாயமானார். 

குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 13-ம் தேதி அதிகாலை, 1.00 மணியளவில், சிவக்குமார் வீட்டில் இருந்து ஒரு சூட்கேசுடன் வெளியேறியது, அவர் குடியிருப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

அவரது மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட அனைத்தையும் வீட்டில் வைத்து சென்றுள்ளார்.

குடும்ப பிரச்னை காரணமாக, சிவக்குமார் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என, கூறப்பட்ட நிலையில் சிவக்குமாரை தேடி தனிப்படை போலீசார் கோவா சென்றுள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...