பா.ஜ.க.வைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் வரும் நவம்.,3-ம் தேதி போராட்டம்

கோவை, அக்டோபர் 28: விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது பா.ஜ.க.வினர் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து வரும் நவம்பர் 3-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசுகையில்,  கமல்ஹாசன் மக்கள் பணியாற்றுவதை விசிக சார்பில் வரவேற்கிறேன். இத்தனை காலம் கலைத்துறையில் இருந்தவர், தற்போது அரசியல் துறையில் தீவிரமாக களம் இறங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியினர் ஆங்காங்கே திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மெர்சல் படம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனின் கருத்துக்கு அரசியல் ரீதியான கருத்தைதான் பதிவு செய்தேன். மெர்சல் திரைபடத்தில் நடிகர் விஜய் பெரிதாக ஏதும் பேசிவிடவில்லை. ஆனால், இந்த படத்தை பா.ஜ.க.வினர் ஏன் இவ்வளவு விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக என்மீது தனிநபர் விமர்சனத்தை வைத்தார்.

இதைக் கண்டித்து வி.சி.க.வினர் ஆங்காங்கே அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். ஆனால் கரூரிலும், மயிலாடுதுறையிலும் நேரடியாக பா.ஜ.க.வினர், வி.சி.க. மீது தாக்குதல் நடத்தினார்கள். தமிழக காவல்துறை அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறதா இல்லை, பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறதா எனத் தெரியவில்லை. மேலும், பா.ஜ.க.வினர் நேரடியாகவும், சமூகவலைதளங்கள் மூலமாகவும், தேவையற்ற கருத்தை பரப்பி வருகின்றனர்.

வி.சி.க. தேர்தலுக்காக கட்சி நடத்தவில்லை, மக்கள் பணியாற்ற நாங்கள் நெடுந்தூரம் இலட்சியத்திற்காக பயணிக்க வேண்டியிருக்கிறது. மேலும்,  தமது கட்சியினருக்கு பல மக்கள் பணிகள் இருக்கிறது. குறிப்பாக, கந்துவட்டி பிரச்சினை தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. அதை ஒடுக்க வேண்டும். யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற விமர்சனங்களை மற்றவர்கள் மீது வைக்க கூடாது. மக்களுக்கு யார் கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார்கள் என்று பொதுமக்களுக்கு தெரியும். இதை மக்கள் பார்வைக்கு விட்டுவிடலாம்.

மேலும், பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வி.சி.க.வினர் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.  ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. இது ஆட்சி நிர்வாகம் வலுவிழுந்ததைக் காட்டுகிறது. உடனடியாக சர்க்கரை விலை உயர்வைக் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...