கோவையில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை: பத்திரிக்கையாளர்கள் காப்பாற்றியதால் உயிர் தப்பினர்

கோவை, அக்டோபர்.28: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, கொடுத்த கடன் வராததால், மகனுடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார். விசைத்தறி உரிமையாளரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நகை கடை உரிமையாளரான மோகன்குமார் என்பவருக்கு தொழில் நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோகன்குமார் தாமதித்து வந்துள்ளார்.

பின்னர், இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குமார் மனமுடைந்துள்ளார். இதையடுத்து, கோவை எஸ்.பி. ஆபிஸில், தனது 7 வயது மகனுடன் குமார் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.



இதுதொடர்பாக, புகார் அளிக்க வந்த அவரை காவலர்கள், குடிகாரர் என புறக்கணித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணையை தன் மீதும், தன் 7 வயது மகனின் உடல் மீதும் ஊற்றியதுடன், தீப்பற்ற வைக்க முற்பட்டார்.

அப்போது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சியின் நிருபர் சொர்ணகுமார் என்பவர், அவரிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி அவரைக் காப்பாற்றினார்.

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் அவ்விருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...