அடுத்த ஆண்டு முதல் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு - அனைத்து ஆட்டோ தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு


கோவை, அக்டோபர் 28: வரும் ஜனவரி மாதம் முதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எல்.பி.எப், ஏ.டி.பி  உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் போது, வரும் ஜனவரி முதல் கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அடுத்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15 வீதம்  கட்டணம் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பான கட்டண பட்டியலையும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வெளியிட்டனர். 



இந்த புதிய கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் ஜனவரி முதல் இந்த புதிய கட்டணத்தின்படி ஆட்டோ கட்டணம் வசூல் செய்வது என முடிவு செய்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களின் வரவால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், டிசம்பர் 17-ம் தேதி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மீண்டும் கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். 

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...