கோவையில் இந்து முன்னணி மாநகர செய்தி தொடர்பாளர் திரு.சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது வரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திரு.சசிகுமார் கொலையில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பரப்படுவதாகவும், அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் அவரது தம்பி திரு.தனபால் (35) இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
இந்த நிலையில், எனது சகோதரர் கொலை பல்வேறு முன்பகைகளின் காரணங்களால் நடைபெற்றது என்றும், எனது குடும்பத்தினரின் கவுரத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
இதனை தடுத்து, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.
இது தொடர்பாக, துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது வரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திரு.சசிகுமார் கொலையில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பரப்படுவதாகவும், அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் அவரது தம்பி திரு.தனபால் (35) இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
இந்த நிலையில், எனது சகோதரர் கொலை பல்வேறு முன்பகைகளின் காரணங்களால் நடைபெற்றது என்றும், எனது குடும்பத்தினரின் கவுரத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
இதனை தடுத்து, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.