சசிகுமார் கொலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாநகர காவல் ஆணையரிடம் மனு

கோவையில் இந்து முன்னணி மாநகர செய்தி தொடர்பாளர் திரு.சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக, துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது வரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், திரு.சசிகுமார் கொலையில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பரப்படுவதாகவும், அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் அவரது தம்பி திரு.தனபால் (35) இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 

எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்த நிலையில், எனது சகோதரர் கொலை பல்வேறு முன்பகைகளின் காரணங்களால் நடைபெற்றது என்றும், எனது குடும்பத்தினரின் கவுரத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. 

இதனை தடுத்து, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...